சென்னை: தமிழக மீனவர்கள் மேலும் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண இருதரப்பு மீனவர்கள் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “வங்கக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம், தங்கச்சி மடம், பாம்பன் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 11 மீனவர்களை அவர்களின் விசைப்படகுடன் இலங்கைக் கடற்படை கைது செய்திருக்கிறது. தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை முடக்கும் நோக்குடன் இலங்கைப் படையினர் தொடர்ந்து நடத்தி வரும் அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.