சென்னை: ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 5 மீன்பிடி படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 32 மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், "தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்களின் எண்ணிக்கை சமீப காலங்களில் கவலை அளிக்கக் கூடிய வகையில் அதிகரித்துள்ளது. நேற்று ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 32 மீனவர்களையும் அவர்களது 5 மீன்பிடி விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் இன்று கைது செய்துள்ளனர்.