ராமேசுவரம்: அமெரிக்காவின் கடல் உணவு பொருட்கள் மீது 50 சதவீத வரி விதிப்பை ஈடுகட்டுவதற்கு மீன் உணவு பொருட்கள் மற்றும் மீன்பிடி உபகரணங்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு வழங்க வேண்டும், என மீனவத் தொழிலாளர் சங்கம் (ஏஐடியுசி) கோரிக்கை விடுத்துள்ளது.
நாட்டின் உணவு உற்பத்தி, அன்னிய செலாவணி ஈட்டுதல், கிராமப்புற வேலைவாய்ப்பு, வாழ்வாதாரம், உணவு பாதுகாப்பு எனப் பல துறைகளில் மீன்பிடி தொழில் முக்கிய பங்கு வகிக்கிறது. பாரம்பரிய வாழ்வாதாரமாகத் தொடங்கிய இத்தொழில் இன்று வணிகரீதியாகவும் தேசிய பொருளாதாரத்தில் அத்தியாவசியமாகவும் திகழ்கிறது.