பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் பும்ரா, ஷமி, அர்ஷ்தீப் சிங் என்று 3 வேகப்பந்து வீச்சாளர்களும் 5 ஸ்பின்னர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர், ஹர்திக் பாண்டியா ஆல்ரவுண்டராக சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் 4 வேகப்பந்து வீச்சாளர்களைத் தேர்வு செய்திருக்க வேண்டும் என்றும், முகமது ஷமி இன்னும் தயாராகவில்லை என்றும் குண்டு ஒன்றை ஆகாஷ் சோப்ரா தூக்கிப் போட்டுள்ளார்.
34 வயதாகும் ஷமி சமீபத்தில் உள்நாட்டுக் கிரிக்கெட்டில் ஆடி பிறகு இங்கிலாந்துக்கு எதிராக இரண்டு டி20 சர்வதேசப் போட்டியிலும் ஆடினார். ஆஸ்திரேலியாவில் பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் சிட்னி டெஸ்ட் போட்டியின் போது முதுகு காயம் காரணமாக பாதியில் விலகிய ஜஸ்பிரித் பும்ராவின் காயம் பற்றிய நிலையையும் பிசிசிஐ இன்னமும் தெளிவுபடுத்தவில்லை. அவருக்கு 5 வாரங்கள் ஓய்வு தேவைப்படுகிறது என்று அகர்கர் கூறியுள்ள நிலையில் அவரை எப்படி சாம்பியன்ஸ் டிராபிக்கு தேர்வு செய்தனர் என்பது தெரியவில்லை.