அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனை வெற்றியோடு நிறைவு செய்துள்ளது தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. எப்போதும் போல தனது ஓய்வு குறித்த முடிவை சஸ்பென்ஸாகவே இந்த சீசனிலும் அப்படியே உயிர்ப்போடு தோனி வைத்துள்ளார்.
குஜராத் டைட்டன்ஸ் உடனான கடைசி லீக் ஆட்டத்தில் 83 ரன்களில் வென்றது சிஎஸ்கே. பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என இந்த ஆட்டத்தில் அனைத்துமே சென்னை சூப்பர் கிங்ஸுக்கு கைகூடியது. இந்த சீசனில் கிடைத்துள்ள பாசிட்டிவ்களை அடுத்த சீசனில் சிஎஸ்கே நிச்சயம் கொண்டு வேண்டும். ஏனெனில், முதல் சீசனோடு சிஎஸ்கே வெளியேறிய போது ‘எஞ்சிய ஆட்டங்களை அடுத்த போட்டிக்கான பயிற்சியாக எடுத்துக் கொள்வோம்’ என சிஎஸ்கே நிர்வாகம் ஒருமித்த குரலில் தெரிவித்தது.