முதல்வர் மருந்தகங்களில் தட்டுப்பாடு இன்றி மருந்துகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அறிவுறுத்தியுள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த பிப்.24-ம் தேதி முதல்வர் மருந்தகங்களை தமிழகம் முழுவதும் திறந்து வைத்தார். இந்த மருந்தகங்களின் தொடர் நடவடிக்கைகள் குறித்து, அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அமைச்சர் கூறியதாவது: முதல்வர் மருந்தகங்கள் வாயிலாக பல்வேறு முதல் தலைமுறை தொழில் முனைவோர் உருவாகியுள்ளனர். இது நம் திராவிட மாடல் ஆட்சிக்கான ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.