முதுமலை: முதுமலையில் இரு புலிகள் உயிரிழப்பை அடுத்து அப்பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தி வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
இது குறித்து முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் வித்யா கூறியது: “முதுமலை புலிகள் காப்பகம், நெலாக்கோட்டை வனச்சரகத்தில் இந்த வாரத்தில் இரண்டு புலிகள் உயிரிழந்தன. ஒன்று 5 வயதுடைய பெண் புலி. மற்றொன்று 10 வயதுடைய ஆண் புலி. முதுமலை புலிகள் காப்பகம் மூன்று மாநிலங்களின் முச்சந்தியில் அமைந்துள்ளதால் புலிகளின் எண்ணிக்கை அதிகம். மேலும், இந்த சரகம் வயநாடு வன உயிரின சரணாலயம் மற்றும் பந்திப்பூர் புலிகள் காப்பகம் மிக அருகாமையில் உள்ள பகுதியாகும். இம்மூன்று பாதுகாக்கப்பட்ட பகுதியிலிருக்கும் புலிகளின் நடமாட்டம் இச்சரகத்தில் தென்படும்.