முதுமலை: முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த சந்தோஷ் (55) என்ற வளர்ப்பு யானை உயிரிழந்தது, பாகன்கள் மற்றும் வனத் துறையினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் முதுமலையில் வளர்ப்பு யானை முகாம் உள்ளது. இங்கு 20-க்கும் மேற்பட்ட யானைகளை வனத் துறையினர் பராமரித்து வருகின்றனர். ஒவ்வொரு யானைக்கும் ஒரு பாகன், ஒரு உதவியாளர் என யானையை பராமரித்து வருகின்றனர். வளர்ப்பு யானைகள் பகல் நேரத்தில் சிறு சிறு பணிகள் செய்வதோடு, தங்களுக்கு தேவையான பசுந்தீவனத்தை வனப் பகுதியில் இருந்து கொண்டு வருவது வழக்கம்.