டெல்லி மற்றும் ஆந்திராவில் முன்னாள் முதல்வர்கள் மிகவும் ஆடம்பரமாக மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட சொகுசு மாளிகைகளை என்ன செய்வது? என புதிய அரசுகள் குழம்பி வருகின்றன.
டெல்லியில் முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் ஆட்சியின் போது, அங்கு 8 ஏக்கர் பரப்பளவில் அரசு பங்களா ரூ.33 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டது. மக்கள் வரிப்பணத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தி அர்விந்த் கேஜ்ரிவால் சொகுசு மாளிகை கட்டியதாக டெல்லி தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக குற்றம் சாட்டியது. அந்த கட்டிடத்திற்கு ‘ஷீஷ் மஹால்’ எனும் பெயரையும் பாஜக சூட்டியது. டெல்லி தேர்தலில் ஷீஷ் மஹால் குறித்து அதிகமான விமர்சனங்களை ஆம் ஆத்மி கட்சி எதிர்க்கொண்டது.