மும்பை: மகாராஷ்டிராவைச் சேர்ந்த வாலிபர் மகா கும்பமேளாவில் புனித நீராட மும்பை முதல் பிரயாக்ராஜ் வரை லிப்ட் கேட்டு ஓசி பயணம் மேற்கொண்டுள்ளார்.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த 22 வயது வாலிபர் திவ்ய ஃபபோனி. மகா கும்பமேளாவில் பங்கேற்க பிரயாக்ராஜ் செல்ல விரும்பினார். இந்தியர்கள் இரக்க குணம் கொண்டவர்கள் என்பதால், லிப்ட் கேட்டு பிரயாக்ராஜ் வரை செல்ல முடிவு செய்தார். ‘லிப்ட்’ என எழுதப்பட்ட பதாகை ஒன்றை மட்டும் கையில் வைத்துக் கொண்டு கடந்த 12-ம் தேதி மும்பையில் இருந்து புறப்பட்டார். பைக், ஸ்கூட்டர், கார், லாரி என ஒவ்வொரு வாகனமாக வழிமறித்தார்.