புதுடெல்லி: மும்மொழிக் கொள்கையின் கீழ் எந்த ஒரு மாநிலத்திலும் எந்த ஒரு மொழியும் திணிக்கப்படாது என்று மாநிலங்களவையில் மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மொழிகளை மாநில அரசுகளும், மாணவர்களுமே முடிவு செய்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய கல்விக் கொள்கையை ஏற்று செயல்படும் மத்திய, மாநில, யூனியன் பிரதேச, உள்ளாட்சி அமைப்புகளால் செயல்படுத்தப்படக்கூடிய பள்ளிகளுக்கு நிதி உதவி அளிக்கும் பிஎம் ஸ்ரீ திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் பள்ளிகள், மாதிரி பள்ளிகளாக உருவெடுக்கும் நோக்கில் மத்திய அரசு நிதி உதவி வழங்குகிறது.