கோவை: “மும்மொழிக் கொள்கையில் தோற்றுவிட்டதை மடைமாற்ற, தொகுதி மறுசீரமைப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். ஆதாரம் இல்லாமல் பேசியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது” என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது:“மார்ச் முதல் வாரத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். நாடாளுமன்றம், சட்டப்பேரவை தொகுதிகள் மறுசீரமைப்பு தொடரப்பாக முதல்வர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மறுசீரமைப்பு வரும்போது தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என முதல்வருக்கு யாரோ கூறியுள்ளனர். அது யார் என்று எனக்கு தெரியாது.