மும்மொழிக் கல்வி கற்க அரசுப் பள்ளி மாணவிகளுக்கு உரிமை இல்லையா என்று முதல்வருக்கு கோரிக்கை விடுத்து, அரசுப் பள்ளி மாணவிகள் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இது தொடர்பாக கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்மொழிக் கல்வி விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள தெளிச்சாத்தநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவிகள் 3 பேர், மும்மொழிக் கல்விக் கொள்கை குறித்து தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்து பேசும் காணொலி நேற்று முன்தினம் முதல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.