டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான குடோன், ஆலைகளில் 2-வது நாளாக நேற்றும் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்றது.
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்துக்கு தனியார் நிறுவனங்களிடம் இருந்து மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. இதில், நிர்ணயித்த அளவைவிட அதிக அளவில் மதுபாட்டில்கள் கொள்முதல் செய்யப்பட்டு, கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டப்படுவதாகவும், அதை கணக்கில் காட்டாமல், தனியார் மது உற்பத்தி நிறுவனங்களுடன் சேர்ந்து முறைகேட்டில் ஈடுபடுவதாகவும் அமலாக்கத் துறைக்கு தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது.