புதுடெல்லி: இப்தார் விருந்தில் சமாஜ்வாதி எம்எல்ஏவான ரவிதாஸ், மெஹ்ரோத்ரா முஸ்லிம்களுடன் இணைந்து தொழுகை நடத்தினார். தலைநகர் லக்னோவில் நிகழ்ந்த இந்த சம்பவம், உத்தரப்பிரதேச மாநில அரசியலில் சர்ச்சையாகி உள்ளது.
தலைநகரான லக்னோவின் மால் ரோடு அவென்யூவில் தாதா மியான் எனும் தர்கா உள்ளது. முஸ்லிம்கள் இடையே பிரபலமான தர்காவில் இப்தார் விருந்து நடைபெற்றது. இதில் மத்திய லக்னோ தொகுதியின் சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏவான ரவிதாஸ் மெஹ்ரோத்ராவும் கலந்து கொண்டார். இப்தாருக்கு பின் முஸ்லிம் அல்லாதவர்கள் செய்வது போல் அவர் விருந்துடன் நிற்கவில்லை.