பெங்களூரு: முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு ஏற்ப அரசியலமைப்பில் திருத்தம் நிகழும் என்று நான் கூறியதாக பாஜக கூறுவதில் உண்மை இல்லை என்று டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.
டி.கே. சிவகுமார் செய்தியாளர் சந்திப்பு: இது தொடர்பாக இன்று (மார்ச் 24) பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார், “நான் ஜேபி நட்டாவை விட விவேகமான, மூத்த அரசியல்வாதி. நான் கடந்த 36 ஆண்டுகளாக சட்டமன்றத்தில் இருக்கிறேன். எனக்கு அடிப்படை பொது அறிவு இருக்கிறது. முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு ஏற்ப அரசியலமைப்பில் மாற்றம் நிகழம் என்று நான் சொல்லவில்லை. பல்வேறு தீர்ப்புகளுக்குப் பிறகு பல மாற்றங்கள் இருக்கும் என்று நான் சாதாரணமாகச் சொன்னேன். அரசியலமைப்பை மாற்றப் போகிறோம் என்று நான் சொல்லவில்லை.