‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கவுள்ளது. இதற்கு ரஜினி வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
‘அரண்மனை 4’ படத்துக்குப் பிறகு சுந்தர்.சியின் அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. கார்த்தி, விஷால், ‘மூக்குத்தி அம்மன் 2’, இந்திப் படம் என பல்வேறு தகவகள் வெளியாகி இருக்கிறது. தற்போது சுந்தர்.சி அடுத்ததாக ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தை இயக்கவிருப்பது உறுதியாகி இருக்கிறது.