சென்னை: சென்னை மெட்ரோ ரயில் தலைமையகக் கட்டிடத்தில் ஏசி-யில் இருந்து வெளிவரும் தண்ணீரை சேகரித்து மறுபயன்பாடு செய்யும் ஆலை நிறுவப்பட்டுள்ளது.
சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவன தலைமையக் கட்டிடம், முதல்வர் மு.க.ஸ்டாலினால் கடந்த 2022-ம் ஆண்டு அக்.27-ம் தேதி திறக்கப்பட்டது. இந்த அலுவலகம், ஒரு அடித்தளம் மற்றும் 12 மாடிகளைக் கொண்டது. மேலும், இந்தக் கட்டிடம் முழுவதும் ஏசி வசதி செய்யப்பட்டுள்ளது.