கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நீலகிரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா கலந்து கொண்டு பேசினார். அப்போது பலத்த காற்று வீசியதால் மேடைக்கு அருகில் இருந்த மின் விளக்குததூண் மைக் மீது சாய்ந்து விழுந்தது.
இதனை சுதாரித்துக் கொண்ட எம். பி ஆ. ராசா சட்டென விலகியதால் நூலிழையில் எந்தக் காயமுமின்றி தப்பினார். இந்தச் சம்பவத்தில் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
மேடையில் சரிந்த மின்விளக்கு – நொடியில் தப்பிய ஆ.ராசா
Leave a Comment