மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் விநாடிக்கு 1,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 700 கனஅடியாக சரிந்துள்ளது. இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 479 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 318 கனஅடியாக சரிந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 110.54 அடியாக இருந்த நிலையில், நேற்று காலை 110.51 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 79.13 டிஎம்சியாக உள்ளது.
The post மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிந்தது appeared first on Dinakaran.