சென்னை: சேலம் மேட்டூர் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி அளித்த மனு மீது உரிய பரிசீலினை செய்து சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டம் கொளத்தூர் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி, அப்பகுதி வார்டு கவுன்சிலர் சுஜிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.