மேற்குவங்கத்தில் பாஜக மூத்த தலைவர் அர்ஜுன் சிங்கின் வீட்டின் மீது மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதனால் பதற்றமான சூழல் உருவாகி உள்ளது.
மேற்குவங்கத்தின் ஜகத்தால் பகுதியை சேர்ந்தவர் அர்ஜுன் சிங். முன்னாள் எம்பியான இவர் பாஜகவின் மூத்த தலைவராக விளங்குகிறார். கடந்த புதன்கிழமை நள்ளிரவில் ஜகத்தாலில் உள்ள இவரது வீட்டின் மீது மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.