கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் மால்டா, முர்ஷிதாபாத் உள்ளிட்ட மாவட்டங்களில் வுக்பு சட்டத் திருத்தத்துக்கு எதிராக நடந்த போராட்டங்களில் வன்முறை வெடித்ததை அடுத்து, அப்பகுதிகளை நேரில் பார்வையிட அம்மாநில ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் சென்றுள்ளார்.
இதற்காக, இன்று (ஏப்ரல் 18, 2025) சீல்டா ரயில் நிலையத்துக்கு வந்த சி.வி.ஆனந்த போஸ், அங்கிருந்து ரயில் மூலம் மால்டாவுக்கு புறப்பட்டார். மால்டா மாவட்டத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட உள்ள ஆளுநர், அங்கு தனது ஆய்வை முடித்துக் கொண்டு முர்ஷிதாபாத் செல்ல உள்ளார். அங்கும் நிலைமையை அவர் பார்வையிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.