மதுராந்தகம் அடுத்த மேலவளம்பேட்டை பகுதியிலிருந்து, தாம்பரம் அருகேயுள்ள இரும்புலியூர் வரையிலான 46.5 கி.மீ. நீளம்கொண்ட சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் இருமார்க்கத்திலும் கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை நிகழ்ந்த 1,023 சாலை விபத்துகளில் 223 பேர் உயிரிழந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல், வாகன ஓட்டிகளின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புறநகர் பகுதியாக விளங்கும் தாம்பரம் அருகே உள்ள இரும்புலியூர் பகுதியில் இருந்து, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகேயுள்ள மேலவளம் பேட்டை பகுதி வரை, 46.5 கி.மீ. தொலைவு கொண்ட சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. 2004 முதல் 4 வழித்தடம் கொண்ட தேசிய நெடுஞ்சாலையாக கட்டமைக்கப்பட்டது.