செயின்ட் கீட்ஸ்: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டி 20 போட்டியில் 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி தொடரை முழுமையாக 5-0 என கைப்பற்றி கோப்பையை வென்றது.
செயின்ட் கீட்ஸில் உள்ள வார்னர் பார்க் மைதானத்தில் நேற்று நடைபெற்ற கடைசி டி 20 ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 19.4 ஓவர்களில் 170 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.