ஷார்ஜா: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டி 20 கிரிக்கெட் போடடியில் 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நேபாளம் அணி தொடரை 2-0 என கைப்பற்றி சாதனை படைத்தது.
ஷார்ஜாவில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற 2-வது டி 20 ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நேபாளம் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 173 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ஆசிப் ஷேக் 47 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 68 ரன்களும் சந்திப் ஜோரா 39 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 63 ரன்களும் விளாசினர். மேற்கு இந்தியத் தீவுகள் அணி தரப்பில் அகீல் ஹோசைன், கைல் மேயர்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர்.