டிரினிடாட்: பல்வேறு நாடுகளில் நடைபெறும் டி20 போட்டிகளில் இடம் பெறுவதற்காக தற்போதுள்ள வீரர்கள் தேசிய அணியை ஒரு படிக்கல்லாக பயன்படுத்துகின்றனர் என்று மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் கேப்டன் லாரா குற்றம்சாட்டியுள்ளார்.
மேற்கு இந்தியத் தீவுகள், ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அண்மையில் நடைபெற்று முடிந்தது. இந்த 3 போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று மேற்கு இந்தியத் தீவுகள் அணியை 3-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்தது. 3-வது டெஸ்டின் 2-வது இன்னிங்ஸில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 27 ரன்களில் சுருண்டது.