ராணிப்பேட்டை: “மும்மொழிக் கொள்கை விவகாரத்தில், தமிழகத்தின் மொழி உணர்வை மத்திய அரசு புரிந்து கொள்ளவில்லை” என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.12 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 6- வகுப்பறை கட்டிங்களின் திறப்பு விழா இன்று (மார்ச் 7) நடைபெற்றது. இதில், பங்கேற்க பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு வந்திருந்தார். முன்னதாக சிப்காட்டில் உள்ள விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார்.