நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவராக உள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ‘‘நாம் ஏன் இந்தி கற்றுக் கொள்ளக் கூடாது?’’ என்று எழுப்பியுள்ள கேள்வி மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
‘‘இந்தி கற்றுக் கொள்வதில் பலன் இருக்கிறது. அது நம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற உதவும். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகியவை பிராந்திய மொழிகள். அதை கற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் எந்த சமரசமும் இல்லை. அதேநேரம் கூடுதலாக இந்தி கற்றுக் கொண்டால், பெருமைக்குரிய நம் நாட்டு மக்கள் அனைவரையும் அது ஒன்றிணைக்கும். மொழி நம்மை ஒன்றுபடுத்தட்டும்; பிளவுபடுத்த அனுமதிக்க வேண்டாம்’’ என்று அவரது ‘எக்ஸ்’ பதிவில் குறிப்பிட்டுள்ளார்.