புது டெல்லி: நாட்டு மக்களின் மனங்களில் தாமரை நம்பிக்கையின் சின்னமாக உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். பாஜகவின் நிறுவன தினத்தை முன்னிட்டு கட்சியினருக்கு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். பாஜகவின் நிறுவன தினத்தை முன்னிட்டு கட்சியினருக்கு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் பகிர்ந்துள்ள பதிவில், “பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியினால் இன்று நாட்டு மக்களின் மனதில் ‘தாமரை’ நம்பிக்கையின் சின்னமாக விளங்குகிறது. கடந்த காலங்களில் பாஜக செய்த சேவை, பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் கலாச்சார விழிப்புணர்வு மாதிரியான பணிகள் வரும் நாட்களில் மைல்கற்களாக மாறும்.