வாஷிங்டன்: பிரதமர் நரேந்திர மோடி எனக்கு எப்போதும் நண்பர் என்று தடலாடியாக யுடர்ன் அடித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். அவருக்கு பதிலளித்துள்ளார் பிரதமர் மோடி. அவரது சூசக பதில் கவனம் பெற்றுள்ளது.
பாகிஸ்தான் மீதான ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை முடிவுக்குக் கொண்டு வந்தது நான்தான் என்று ட்ரம்ப் அடிக்கடி கூறியது, இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் இறக்குமதி வரி விதித்தது போன்ற காரணங்களால் இந்தியா – அமெரிக்கா உறவில் சமீபத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், ட்ரம்ப், பிரதமர் மோடியுடன் பேச முயற்சித்ததாகவும் ஆனால் 4 முறை ட்ரம்ப் அழைப்பை மோடி புறக்கணித்தார் என்றும் கூறப்படுகிறது.