சென்னை: பிரதமர் மோடி பங்கேற்ற கங்கைகொண்ட சோழபுரம் நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டதில் எந்த திருப்புமுனையும் இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு விசிக துணை பொதுச் செயலாளர் வன்னியரசு பதிலளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், “சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கங்கைகொண்ட சோழபுரத்தில் முதலாம் ராஜேந்திர சோழனின் ஆயிரமாவது பிறந்த நாள் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்றார். இதில் எந்த அரசியலும் இல்லை.