புதுடெல்லி: மத்தியப் பிரதேசத்தின் 27 மதரஸாக்களில் 556 இந்து குழந்தைகளுக்கு புனிதக் குர்ஆன் கற்றுத் தரப்பட்டுள்ளது. ‘இது, மதமாற்ற முயற்சியா?’ எனக் கேட்டு தேசிய மனித உரிமை ஆணையம் ம.பி. அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
556 இந்து குழந்தைகளுக்கு குர்ஆன் கற்பிக்கப்படுவதும், மத்தியப் பிரதேசத்தில் 27 மதரஸாக்கள் மதமாற்றத்திற்குத் தயாராகி வருவதும் ஏன்? என மனித உரிமைகள் ஆணையம் விளக்கம் கோரியுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் போபால், ஹோஷங்காபாத், ஜபல்பூர், ஜபுவா, தார், பர்வானி, காண்ட்வா, கார்கோன் மற்றும் பராசியா மாவட்டங்களில் அரசு அனுமதி பெறாத பல மதரஸாக்கள் செயல்படுகின்றன.