சென்னை: யானைகள் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் இருக்க உலக யானைகள் தினத்தில் உறுதி ஏற்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உலக யானைகள் தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: உலக யானைகள் நாளில், தமிழகத்தின் இயற்கை மரபையும், வரலாற்றையும் செழுமைப்படுத்துவதில் யானைகளின் அளப்பரிய பங்கு குறித்து சிந்தித்துப் பார்ப்போம்.