தெஹ்ரான் : யாருடைய அச்சுறுத்தலுக்கும் அடிபணிந்து சரணடைய மாட்டோம் என்று ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஈரான் சரணடைய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவுறுத்திய நிலையில் ஈரானிய தலைவர் ஆயத்துல்லா காமேனி இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார். அமெரிக்கா தலையிட்டால் சரிசெய்ய முடியாத சேதத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் ஈரான் மீது தாக்குதலை நடத்தி இஸ்ரேல் தவறு இழைத்துவிட்டது, இஸ்ரேல் நிச்சயம் தண்டிக்கப்படும் என்றும் காமேனி தெரிவித்துள்ளார்.
The post யாருடைய அச்சுறுத்தலுக்கும் அடிபணிந்து சரணடைய மாட்டோம் : ஈரான் திட்டவட்டம் appeared first on Dinakaran.