வாஷிங்டன்: பரஸ்பர வரி விதிப்பு அறிவிப்பினைத் தொடர்ந்து, அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு வரிகளை குறைக்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும் “அவர்கள் செய்ததை யாரோ ஒருவர் அம்பலப்படுத்தியதால் இந்தியா இந்த முடிவெடுத்துள்ளது” என ட்ரம்ப் தெரிவித்தார்.
வெள்ளை மாளிகையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த ட்ரம்ப் கூறுகையில், "இந்தியா நம்மிடம் மிக அதிகமான வரிகளை வசூலிக்கிறது, அதிகமாக! உங்களால் இந்தியாவில் எதனையும் விற்பனை செய்ய முடியாது. ஒருவழியாக அவர்கள் தங்களின் வரிகளை குறைக்க ஒப்புக்கொண்டுள்ளனர். அவர்கள் செய்ததை யாரோ ஒருவர் அம்பலப்படுத்தியதால் அவர்கள் தங்களின் வரிகளைக் குறைக்க விரும்புகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.