நியூயார்க்: யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் நடப்பு சாம்பியனான இத்தாலியின் ஜன்னிக் சின்னர் 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் முதல் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான இத்தாலியின் ஜன்னிக் சின்னர், 36-ம் நிலை வீரரன ஆஸ்திரேலியாவின் அலெக்ஸி பாப்ரினுடன் மோதினார். இதில் ஜன்னிக் சின்னர் 6-3, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.