குடிமைப் பணிக்கான (ஐஏஎஸ்) முதல் நிலைத் தேர்வு, வழக்கம் போல குறிப்பிட்ட நாளில், தேர்வர்களுக்கு அதீத சோதனை / இடையூறு இல்லாமல், திட்டப்படி சரியாக நடந்து முடிந்துள்ளது. மத்திய தேர்வாணையத்தை மனதாரப் பாராட்டலாம்.
இனி.., முதல் நிலைத் தேர்வின் வினாத் தாளுக்குள் நுழைவோம். பொதுவாக எதிர்பார்த்த பகுதிகளில் இருந்து நேரடிக் கேள்விகள் அதிகம். ஒன்றே ஆண்டுகளில் இருந்து சில கேள்விகள், மாலையில் எளிமையான 'சீசாட்' தேர்வு.. 'பழகிய' தேர்வர்களுக்கு சாதகம் அதிகம். உண்மைத் தகவல்கள் அடிப்படையில் அமைந்த கேள்விகள் சற்றே கூடுதலாய் இருந்தன. முறையாகத் தயார் செய்து தேர்வு எழுதியவர்கள், நிச்சயம் மகிழலாம். சரியான வழிகாட்டுதல் கிடைக்கப் பெற்ற முதன்முறைத் தேர்வர்களும் அடுத்த நிலைக்கு இப்போதே தயாராகலாம்.