புதுடெல்லி: அணுசக்திப் பொருட்களை தவறான பயன்படுத்துவதற்கான வாய்ப்பு, கதிர்வீச்சு மற்றும் பாதுகாப்பு தொடர்பான கவலைகள் காரணமாக யுரேனியம் தாதுக்களை வெட்டியெடுத்தல், இறக்குமதி செய்தல், பதப்படுத்துதல் ஆகியவற்றில் மத்திய அரசு தனி யாரை அனுமதிக்கவில்லை.
இந்நிலையில் 2047-ம் ஆண்டுக்குள் நாட்டின் அணுமின் உற்பத்தி திறனை 12 மடங்கு அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. எனவே அணுசக்தி துறையில் அரசின் ஏகபோகத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் இத்துறையில் தனியாரையும் அனுமதிப்பது குறித்து அரசு திட்டமிட்டுள்ளது.