இங்கிலாந்து U-19 அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட இளையோர் ஒருநாள் தொடரில் இந்தியா U-19 அணி 3-2 என்ற கணக்கில் தொடரை வென்றதில் வைபவ் சூர்யவன்ஷி நட்சத்திரமாகத் திகழ்ந்தார். சூர்யவன்ஷி இந்தத் தொடரில் சதம் மற்றும் அரைசதங்களும் 355 ரன்கள் எடுத்தது சராசரி மற்றும் ஸ்ட்ரைக் ரேட்டுடன் சேர்ந்து இளையோர் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் புதிய சாதனையாகத் திகழ்கிறது.
ஐபிஎல் 2025-ல் புதிதாக எழுச்சி கண்ட இளம் நட்சத்திரமான 14 வயது வைபவ் சூரியவன்ஷி தன் ஆட்டம் வெறுமனே வாச்சாம்பொழச்சான் ஆட்டம் அல்ல, சர்வதேச அளவிலும் இதே போல் ஆட முடியும் என்பதை நிரூபித்தத் தொடராகும் இது.