பெங்களூரு: நடிகை ரன்யா ராவ் துபாயில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்தி வந்த விவகாரத்தில் தருண் ராஜு என்பவரை கைது செய்துள்ளனர் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள். அவருக்கு இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக தகவல். அவர் பிரபல ஹோட்டல் அதிபரின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் ரன்யா ராவ் போலீஸ் டிஜிபி ராமசந்திர ராவின் வளர்ப்பு மகள் என்பதால், விமான நிலையத்தில் ஏதேனும் விதிமுறை மீறல் நடந்ததா என்பதை விசாரிக்க கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
அவரை நீதிபதி முன் ஆஜர்படுத்திய நிலையில், 5 நாட்களில் அவரை காவலில் வைத்து விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த வழக்கில் தருணுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வர ரன்யா ராவுக்கு தருண் ராஜு உதவி உள்ளார் என தகவல்.