கர்நாடக மாநில வனத்துறையினர் ரப்பர் புல்லட்டை பயன்படுத்தி யானைகளை விரட்டுவதால், வலசை வந்த யானைகள் அடர்ந்த வனப் பகுதிக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக்கோட்ட வனப்பகுதிக்கு ஆண்டுதோறும் அக்டோபரில் கர்நாடக மாநிலம் பன்னர் கட்டா தேசிய பூங்கா மற்றும் காவிரி உயிரின சரணாலயம் பகுதியிலிருந்து 200-க்கும் மேற்பட்ட யானைகள் வலசை வரும். இவை ஜவளகிரி வனப்பகுதி வழியாக தேன்கனிக்கோட்டை, நொகனூர், ஊடேதுர்கம், சானமாவு, செட்டிபள்ளி மற்றும் மகாராஜாகடை வழியாக ஆந்திர மாநிலம் கவுண்டனியா சரணாலயம் மற்றும் ஸ்ரீவெங்கடேஷ்வரா சரணாலயம் வரை வலசை செல்லும். பின்னர் ஏப்ரல், மே மாதங்களில் கர்நாடக மாநிலத்துக்கு திரும்பும்.