சென்னை: ரயில்கள், ரயில் நிலையங்களில் உணவு பொருட்கள் விற்பனை, விநியோகத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு க்யூஆர் குறியீடு கொண்ட அடையாள அட்டை வழங்குமாறு ஒப்பந்ததாரர்களுக்கு ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து ரயில்வே மண்டலங்களுக்கு ரயில்வே வாரியம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: ரயில்கள், ரயில் நிலையங்களில் பயணிகளுக்கான குடிநீர், உணவு, சிற்றுண்டி, குளிர்பானம் உள்ளிட்ட பொருட்களை விற்பனை, விநியோகம் செய்யும் ஊழியர்களுக்கு சம்பந்தப்பட்ட ஒப்பந்த தாரர்கள் இனி கட்டாயம் க்யூஆர் குறியீடு கொண்ட அடையாள அட்டை வழங்க வேண்டும்.