புதுடெல்லி: “மத்திய அரசு சார்பில் தெற்கு ரயில்வேக்கு ரூ.6,626 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது, ஆனால் வடக்கு ரயில்வேக்கு ரூ.14,745 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஏன் இந்த பாரபட்சம்” என ரயில்வே துறை மானியக் கோரிக்கையில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் துணைத்தலைவர் கே.நவாஸ்கனி கேள்வி எழுப்பினார்.
இது குறித்து ராமநாதபுரம் மக்களவை தொகுதி எம்பியான கே.நவாஸ்கனி பேசியதாவது: ரயில்வே துறைக்கு என்று தனியாக இருந்த நிதிநிலை அறிக்கையை ஒழித்து விட்டு, இப்போது மானிய கோரிக்கையாக விவாதிக்க கூடிய ஒரு நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றது, இது, ரயில்வே துறையை எந்த அளவிற்கு பின்னோக்கி இழுத்துச் சென்று கொண்டிருக்கின்றது என்பதை உணர்த்துகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட ரயில் விபத்துகள் நாடு முழுவதும் நடந்துள்ளன. கிட்டத்தட்ட 351 பேர் உயிரிழந்துள்ளார்கள், 970 பேர் காயமடைந்திருக்கிறார்கள்,