சென்னை: ரயில்வே தேர்வு எழுதும் மாணவர்களின் வசதிக்காக திருச்சி – திருவனந்தபுரம் இடையிலான ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ரயில்வே தேர்வு எழுத செல்லும் மாணவர்களின் வசதிக்காக எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்படுகின்றன.
அதன்படி, எர்ணாகுளம் – கண்ணூர், திருச்சி – திருவனந்தபுரம், திருவனந்தபுரம் -குருவாயூர் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் (வண்டி எண்- 16305, 22627, 16342) இன்று (செவ்வாய்கிழமை) முதல் வருகிற 18-ம் தேதி வரை கூடுதலாக ஒரு 2-ம் வகுப்பு பொது பெட்டி இணைக்கப்படுகிறது.
அதே போல, கண்ணூர் – ஆலப்புழா, ஆலப்புழா – கண்ணூர், குருவாயூர் – திருவனந்தபுரம், திருவனந்தபுரம் -திருச்சி இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் (16308, 16307, 16341, 22628) இன்று முதல் 19-ம் தேதி வரை கூடுதலாக ஒரு 2-ம் வகுப்பு பொது பெட்டி இணைக்கப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
The post ரயில்வே தேர்வு எழுதும் மாணவர்களின் வசதிக்காக எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு! appeared first on Dinakaran.