Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: ரஷ்யாவில் 3 முறை நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையால் பதற்றம்
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran World

ரஷ்யாவில் 3 முறை நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையால் பதற்றம்

EDITOR

மாஸ்கோ: ரஷ்யாவில் 3 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் சுனாமி ஆபத்து நீங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் காம்செட்கா தீபகற்பம் பகுதியில் பெட்ரோபாவ்லோஸ்கி-காம்சட்கி நகர் உள்ளது. இந்த நகருக்கு 144 கிமீ தொலைவில் கடலில் 5 ரிக்டர் அளவில் நேற்று முதலில் நிலநடுக்கம் ஏற்பட்டது.அதை தொடர்ந்து 6.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

பின்னர் 7.4 என்ற அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து சுனாமி ஏற்படலாம் என பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்தது. மிகப்பெரிய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ரஷ்யாவின் அவசரகால அமைச்சகமும் சுனாமி எச்சரிக்கையை வெளியிட்டது. கடலோர குடியிருப்புகளில் வசிப்பவர்கள் கரையிலிருந்து விலகி இருக்குமாறு அறிவுறுத்தியது. இதனால் பதற்றம் ஏற்பட்டது.

இறுதியில் சுனாமி ஏற்படும் ஆபத்து இல்லை என்று சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்தது. இதில் உயிரிழப்புகள் அல்லது சேதங்கள் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் இல்லை. கடந்த 1952, நவம்பர் 4, அன்று,காம்சட்காவில் 9.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது 30 அடி உயரத்துக்கு அலைகள் எழுந்த போதிலும் உயிரிழப்புகள் ஏற்படவில்லை.

The post ரஷ்யாவில் 3 முறை நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையால் பதற்றம் appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • குடியரசுத் துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர் ராஜினாமா!
  • “கேரளாவின் சமூக பொருளாதார வளர்ச்சியில் அச்சுதானந்தனின் பங்கு மகத்தானது” – பெ.சண்முகம் புகழஞ்சலி
  • “முதல்வர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார்” – அமைச்சர் துரைமுருகன் தகவல்
  • கீழடி அகழாய்வில் திருத்தப்பட்ட அறிக்கை ஏதும் கோரப்படவில்லை: மத்திய அரசு
  • விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை ஜூலை 26-ல் பிரதமர் திறந்து வைக்கிறார்!
  • நரேந்திர மோதிக்கு 1,000 கிலோ மாம்பழத்தை வங்கதேசம் அனுப்பியது ஏன்?

You Might Also Like

சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல்

July 16, 2025

1996ல் நடந்த விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் கோப்பை பறிபோனதற்கு மைதானத்தில் நிர்வாணமாக ஓடிய பெண் தான் காரணம்: 29 ஆண்டுகள் கழித்து ஓப்பனாக அறிவித்த வீரர்

July 14, 2025

1931ம் ஆண்டு வரையப்பட்டது இங்கிலாந்தில் மகாத்மா காந்தியின் ஓவியம் ரூ.1.7 கோடிக்கு ஏலம்

July 16, 2025

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் வெளுத்து வாங்கிய கனமழை: வெள்ளக்காடாக காட்சியளிக்கும் குடியிருப்புகள், வணிக வளாகங்கள்

July 16, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?