வாஷிங்டன் டிசி: ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரை நிறுத்தத் தவறியதை ஒப்புக்கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், இது தனது நிர்வாகத்தின் போது எதிர்கொண்ட மிகவும் கடினமான மோதல் எனக் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளை மாளிகையில் புதிதாக புதுப்பிக்கப்பட்ட ரோஸ் கார்டனில் நடைபெற்ற இரவு விருந்தில் பேசிய ட்ரம்ப், “ஏழு மாதங்களில் நாங்கள் செய்ததை யாரும் செய்யவில்லை. ஏழு போர்களை நாங்கள் நிறுத்தினோம். ஆனால், எளிதானதாக இருக்கும் என்று நான் நினைத்த ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் மிகவும் கடினமானது. ரஷ்ய அதிபர் புதினுடனான உறவு காரணமாக அந்த போரை நிறுத்துவது எளிதானதாக இருக்கும் என்று நான் நினைத்தேன். ஆனால், அது மிகவும் கடினமானதாக முடிந்தது.