மாஸ்கோ: ரஷ்ய விமானப்படை தளம் மீது உக்ரைன் நடத்திய மிகப்பெரிய தாக்குதலில் 10 பேர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சரடோவ் பிராந்தியத்தில் உள்ள ரஷ்ய விமானப்படை தளத்தை குறி வைத்து உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்தியதாகவும் தாக்குதல் நடத்த முயன்ற உக்ரைனின் 132 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. போர் நிறுத்த முடிவை தடுக்கும் முயற்சியாக உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளதாக ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.
The post ரஷ்ய விமானப்படை தளம் மீது உக்ரைன் நடத்திய மிகப்பெரிய தாக்குதலில் 10 பேர் காயமடைந்ததாக தகவல் appeared first on Dinakaran.