புதுடெல்லி: இந்தியாவில் உள்ள வக்பு நிலங்களின் அளவோடு கத்தோலிக்க சர்ச்களுக்கு சொந்தமான நிலங்களை ஒப்பிட்டு ஆர்எஸ்எஸ் சார்பு பத்திரிகையான ஆர்கனைசர் கட்டுரை வெளியிட்டிருந்தது. ராகுல் காந்தியால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட அந்தக் கட்டுரை இப்போது நீக்கப்பட்டுள்ளது.
ஆர்எஸ்எஸ் சார்பு ஆங்கில பத்திரிகையான ஆர்கனைசரின் டிஜிட்டல் தளத்தில் ஒரு கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது. ‘இந்தியாவில் யாருக்கு அதிக நிலம் உள்ளது? கத்தோலிக்க திருச்சபைகள் Vs வக்பு வாரியம் விவாதம்’ என்ற தலைப்பிலான அந்தக் கட்டுரையில், "பல ஆண்டுகளாக, வக்பு வாரியம்தான் இந்தியாவில் அரசுக்கு அடுத்து இரண்டாவது பெரிய நில உரிமையாளர் என்ற பொதுவான நம்பிக்கை உள்ளது. இருப்பினும், இந்த கூற்று நாட்டின் நில உரிமை குறித்த உண்மையான தரவுகளுடன் ஒத்துப்போகவில்லை.