புதுடெல்லி: பிஹாரில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வாக்காளர் அதிகார யாத்திரை நடத்தினார். இது 25 மாவட்டங்களைக் கடந்தது. ராகுலுடன், ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் தேஜஸ்வி யாதவ், சிபிஐ-எம்எல் பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா, விகாஷீல் இன்சான் கட்சித் தலைவர் முகேஷ் சஹானி பங்கேற்றனர்.
பிஹாரில் மொத்தம் உள்ள 243 சட்டப்பேரவைத் தொகுதிகளில் சுமார் 100 தொகுதிகளில் இந்த யாத்திரை நடைபெற்றது. இண்டியா கூட்டணியில் உள்ள திமுக தலைவர் ஸ்டாலின், சமாஜ்வாதியின் அகிலேஷ் யாதவ், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், டிஎம்சியின் யூசுப் பதான் மற்றும் சிவசேனாவின் சஞ்சய் ராவத் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். பூர்ணியா சுயேச்சை எம்.பி. பப்பு யாதவ் என்ற ராஜேஷ் ரஞ்சனும் ராகுலுடன் யாத்திரையில் கலந்து கொண்டார்.